பங்குச் சந்தைகளில் களை கட்டிய பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ்1,181 புள்ளிகள் அதிகரிப்பு

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 1,181 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவில் எதிர்பார்த்ததை காட்டிலும் பணவீக்கம் குறைந்ததுள்ளதால், அந்நாட்டு மைய வங்கி  வட்டி விகித உயர்வை நடவடிக்கையை நிதானமாக மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,821  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,640  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.284.45 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.85 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,181.34 புள்ளிகள் சரிவு கண்டு 61,795.04 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 321.50 புள்ளிகள் குறைந்து 18,349.70 புள்ளிகளில் முடிவுற்றது.