தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 420 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 420 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பணவீக்க குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட  மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,265  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,200  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 127 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.60 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.30 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 419.85 புள்ளிகள் சரிவு கண்டு 60,613.70 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 128.20 புள்ளிகள் குறைந்து 18,028.80 புள்ளிகளில் முடிவுற்றது.