சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்ந்தது...

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. ரிசர்வ் வங்கி இன்று வட்டி விகிதத்தை உயர்த்தியது பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,865 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,483 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.271.26 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 89.13 புள்ளிகள் உயர்ந்து 58,387.93 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 15.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,397.50 புள்ளிகளில் முடிவுற்றது.