ஏறிய இறங்கிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிவு..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிவு கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், சீனாவின் போர் பயிற்சி, ரூபாய் மதிப்பு நிலவரம் போன்ற காரணங்களால் பின்னர் சரிவு கண்டது. பின்பு ஏற்றம் கண்டாலும் இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன் பார்மா மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இதர வருவாய் பாதிப்பு.. ஆனாலும் ரூ.487 கோடி லாபம் பார்த்த நெஸ்லே இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,554 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,790 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 132 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.271.31 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.28 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.73 புள்ளிகள் குறைந்து 58,298.80 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 6.15 புள்ளிகள் சரிவு கண்டு 17,382.00 புள்ளிகளில் முடிவுற்றது.