தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக ஏறுமுகத்தில் பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயர்ந்தது.

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது. இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில்,டெக் மகிந்திரா மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி மற்றும் சன் பார்மா உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,372 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,975 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 137 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.271.08 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214.17 புள்ளிகள் உயர்ந்து 58,350.53 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 42.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,388.15 புள்ளிகளில் முடிவுற்றது.