வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் ஏற்றம்.. சென்செக்ஸ் 545 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 545 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகள வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் என்.டி.பி.சி.  உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன் பார்மா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலைகுறைந்தது.

விளம்பர செலவினம் அதிரடி குறைப்பு…. ரூ.1,881 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,299 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,161 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 196 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.270.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.67 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 545.25 புள்ளிகள் உயர்ந்து 58,115.50 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 181.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,340.05 புள்ளிகளில் முடிவுற்றது.