பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு! பேருந்தை தீயிட்டு கொளுத்திய பொதுமக்கள்

 

பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு! பேருந்தை தீயிட்டு கொளுத்திய பொதுமக்கள்

சென்னை அருகே பாமக நிர்வாகி, தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். ஆத்திரத்தில் பொதுமக்கள் பேருந்தை தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தில் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்தப் பேருந்தை தீ வைத்து எரித்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு! பேருந்தை தீயிட்டு கொளுத்திய பொதுமக்கள்

விபத்தில் சிக்கிய பேருந்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.