நடுரோட்டில் இளம்பெண் உயிருடன் எரித்துக்கொலை – மூன்று இளைஞர்களின் வெறிச்செயல்
Jul 25, 2021, 15:14 IST1627206262000
இரவில் 31 வயது இளம்பெண்ணை மூன்று இளைஞர்கள் உயிருடன் எரித்துகொலை செய்துள்ள சம்பவம் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தில் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து உயிருடன் தீ வைத்து கொளுத்திவிட்டு ஓடியிருக்கிறார்கள்.
தீயில் எரிந்த இளம்பெண்போட்ட அலறல் சத்தத்தினால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த படுகொலை சம்பந்தமாக24,26,34 வயதுடைய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் இளம்பெண்ணை உயிருடன் எரித்தது ஏன் என்பது குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.