புயல் வலுவிழந்தது; மணிக்கு 50 கிமீ- 65 கிமீ வரையில் பலத்த காற்று வீசக்கூடும் – வானிலை மையம்

 

புயல் வலுவிழந்தது; மணிக்கு 50 கிமீ- 65 கிமீ வரையில் பலத்த காற்று வீசக்கூடும் – வானிலை மையம்

புரெவி புயலின் தற்போதைய நிலை குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புரவி புயல் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு வலுவிழந்தது. பாம்பன் அருகே புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பாம்பனுக்கு தென்மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் மன்னார்வளைகுடா பகுதிகளில் 50 கிலோ மீட்டர் முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும்.

புயல் வலுவிழந்தது; மணிக்கு 50 கிமீ- 65 கிமீ வரையில் பலத்த காற்று வீசக்கூடும் – வானிலை மையம்

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்அடுத்த 24 மணி நேரத்துக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். புயல் வலுவிழந்ததால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யக்கூடும்” எனக் கூறினார்.