பாலியல் புகாரளித்த பெண் மீது கொடூர தாக்குதல் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

 

பாலியல் புகாரளித்த பெண் மீது கொடூர தாக்குதல் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

தெலுங்கானா அருகே பாலியல் புகார் கொடுத்த பெண்ணை, ஒரு நபர் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கொர்லகுண்டா பகுதியில் வசித்து வருபவர் விமலா. இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்தது. விமலாவுக்கு அப்பகுதியை சேர்ந்த ராகுல் தோட் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். ஆத்திரமடைந்த விமலா, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ராகுலை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சிறைக்கு சென்ற போதே தனக்கு எதிராக புகார் அளித்த விமலா, மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார் ராகுல்.

பாலியல் புகாரளித்த பெண் மீது கொடூர தாக்குதல் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

இந்த நிலையில், நேற்று ஜாமீனில் வெளியே வந்த ராகுல் விமலா வீட்டிற்கு சென்று வாசலில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த அவரை கோடாரியால் சரமாரியாக தாக்கியுள்ளார். பயந்து போன விமலா குழந்தையைத் தூக்கிக் கொண்டு பதறி ஓடியதால், விரட்டிச் சென்றும் தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த விமலாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், ரங்கா ரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விமலாவின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், ராகுலை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர். விமலாவை ராகுல் தாக்கும் சிசிடிவி காட்சியை சோதனை செய்த போது, ராகுலுடன் 2 பேர் இதற்கு உடைந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.