” நீ வரலேன்னா ,பேஸ் புக்ல வந்துடும்”-இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து, பலமுறை பலாத்காரம் செய்த சகோதரர்கள் ..
ஒரு இளம்பெண்ணை , அவரின் ஆண் நண்பர் பலாத்காரம் செய்யும் வீடியோவினை எடுத்து, அதை நெட்டில் விடுவதாக மிரட்டியே அவரின் ஆறு நணபர்களுடன் சேர்ந்து மூன்றாண்டுகளாக பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிகரமான விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது .
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஒரு இளம் பெண்ணும் அவரின் தாயும் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்துவந்தனர் .அப்போது அந்த இளம்பெண்ணுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்த ஒரு வாலிபர் நண்பரானார் .அவர் அந்த ஆண் நண்பருடன் பல இடங்களில் சுத்திவந்துள்ளார் .அப்போது அந்த நபர் அந்த பெண்ணை பல இடங்களில் ஆபாசமாக படம் பிடித்துள்ளார் .பிறகு அந்த படங்களை காமித்து ,அதை பேஸ் புக்கில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் .அதை வீடியோவும் எடுத்துள்ளார்
இந்நிலையில் இதை தெரிந்துகொண்ட அந்த வாலிபரின் சகோதரரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் வீடியோவினை நெட்டில் விடுவதாக மிரட்டல் விடுத்து, அவரும் மூன்றாண்டுகளாக அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் .அதுமட்டுமல்ல அவரின் நான்கு நண்பர்களுக்கும் அவரை விருந்தாக்கியுள்ளார் .இப்படி அந்த ஆறு பேரும் சேர்ந்து அந்த பெண்ணைகடந்த மூன்றாண்டுகளாக பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர் .
கடந்த ஜூலை 3ம் தேதி அவர்கள் அந்த பெண்ணை மீண்டும் வீடியோவை காமித்து ,மிரட்டி தனியே கூப்பிட்டபோது அந்த பெண் பொறுக்கமுடியாமல் இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் கூறியுள்ளார் .
அதைக்கேட்டு கொதித்து போன அவரின் தாய் அந்த ஆறுபேர் மீதும் போலீசில் புகாரளித்தார் .போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் 5 பேரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர் .மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர் .