காவிரியில் குளித்த அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு

 

காவிரியில் குளித்த அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு

கொடுமுடியில் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் கோகுல். இவரது தம்பி மனோஜ், கல்லூரி இறுதி ஆண்டு படித்துவருகிறார். சகோதரர்கள் இருவரும், உறவினர்களுடன் சேர்ந்து கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மனோஜ் திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டார்.

காவிரியில் குளித்த அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு

இதனை கண்ட கோகுல், தம்பியை காப்பாற்ற முயற்சித்தபோது அவரும் நீரில் மூழ்கினார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குஇருவரையும் சடலமாக மீட்டனர்.