விழுப்புரம் அருகே கிணற்றில் முழ்கி அண்ணன், தங்கை பலி!

 

விழுப்புரம் அருகே கிணற்றில் முழ்கி அண்ணன், தங்கை பலி!

விழுப்புரம்

விழுப்புரம் அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி அண்ண, தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி பகுதியை சேர்ந்தவர்கள் குமார் – சங்கரி (26) தம்பதியினர். இவர்களுக்கு தினேஷ்(5) என்ற மகனும், சத்யாஶ்ரீ(4) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று விக்கிரவாண்டி அடுத்த அரசூரில் நடந்த உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குமார், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றிருந்தார்.

விழுப்புரம் அருகே கிணற்றில் முழ்கி அண்ணன், தங்கை பலி!

பிற்பகல் 3 மணியளவில் குழந்தைகள் தினேஷ், சத்யா ஆகியோர், அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி உள்ளனர். தொடர்ந்த, அவர்கள் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக தினேஷும, சத்யஶ்ரீயும் கிணற்றில் மூழ்கினர்.இதனை கண்டு மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து குழந்தைகளை தேடினர்.

அப்போது மயங்கிய நிலையில் கிடந்த 2 பேரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர், இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இது குறித்து, விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.