கோயில் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் கொள்ளை!

 

கோயில் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் கொள்ளை!

விருதுநகர்

ராஜபாளையம் அருகே கோயில் பூட்டை உடைத்து 9 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

ராஜபாளையம் அடுத்த அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தில் முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து பூசாரி பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.

கோயில் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் கொள்ளை!

அப்போது, கோயிலில் இருந்த பீரோவை உடைத்து, அதனுள் வைத்திருந்த 9 சவரன் அம்மன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 15 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் கோயில் நிர்வாகிகள் மற்றும் சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.