விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை!

 

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை!

தென்காசி

ஆலங்குளம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த உடையாம்புலி கிராமத்தை சேர்ந்தவர் முத்து(52). விவசாயி ஆன இவருக்கு மயில்வேல் என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, முத்து வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை!

தொடர்ந்து இன்று காலை திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபேது, பீரோ உடைக்கப்பட்டு, அதனுள் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முத்து, ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறிதது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.