விவசாயி வீட்டில் 70 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை

 

விவசாயி வீட்டில் 70 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை

தஞ்சாவூர்

தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டின் கதவுகளை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள சுந்தரம் நகரை சேர்ந்தவர் விவசாயி வைத்தியலிங்கம். இவர் கடந்த 31ஆம் தேதி உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, வைத்தியலிங்கத்தின் உடலை அவரது சொந்த ஊரான பொன்னமராவதிக்கு உறவினர்கள் எடுத்துச்சென்றனர்.

விவசாயி வீட்டில் 70 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை

இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில் வைத்தியலிங்கத்தின் மனைவி சரஸ்வதி நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில், வீட்டில் இருந்த 4 பீரோக்களை உடைத்து 70 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

விவசாயி வீட்டில் 70 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை

இதுகுறித்து சரஸ்வதி, தஞ்சை பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.