‘விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடையே தகராறு’. கல்லால் அடித்து சிறுவன் கொலை; அதிர்ச்சி சம்பவம்!

 

‘விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடையே தகராறு’. கல்லால் அடித்து சிறுவன் கொலை; அதிர்ச்சி சம்பவம்!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் இந்திராபுரி எனும் பகுதியில் பழைய வீடு ஒன்று இருக்கிறது. அந்த வழியே சென்ற பொதுமக்கள், அங்கு ஒரு சிறுவனின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் பெயர் சச்சின் என்றும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.

‘விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடையே தகராறு’. கல்லால் அடித்து சிறுவன் கொலை; அதிர்ச்சி சம்பவம்!

இதனையடுத்து சச்சினின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதில், கடந்த 1 ஆம் தேதி சச்சினுடன் அதூல் மற்றும் சூரஜ் ஆகிய 2 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது தகராறு ஏற்பட்டதால் சச்சினை அதூலும் சூரஜூம் கல்லால் அடித்துக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு கொலையை மறைக்க, ஊருக்கு வெளியே இருக்கும் அந்த பழைய வீட்டில் சச்சினின் உடலை போட்டதும் அம்பலாமாகியுள்ளது.

இது குறித்து அதூல் ஆற்றும் சூரஜ் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் சச்சினை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், சீர்திருந்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.