நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

 

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

வேதாரண்யம் அருகே பெற்றோருக்கு உடை எடுத்து வரச்சென்ற சிறுவன் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நேற்று நிவர் புயல் காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து பெய்த கனமழையால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையாக வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த வகையில், வானவன்மகாதேவி கிராமத்தில் வசித்து வந்த புண்ணியகுமார் (16), தனது பெற்றோர்களுடன் முகாமில் தங்கி இருந்தார். பெற்றோர்களுக்கு உடை கொண்டு வருவதற்காக அந்த சிறுவன், தனது நண்பர் ஒருவருடன் பலத்த மழையிலும் பைக்கில் சென்றிருக்கிறார்.

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

அச்சமயம் பலத்த காற்று வீசியதால் நிலை தடுமாறிய பைக், அப்பகுதியில் இருந்த மின்கம்பம் ஒன்றன் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த புண்ணியகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடன் சென்ற இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.