படகு ரிப்பேர்… யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வேதாராண்யம் மீனவர்கள்!

 

படகு ரிப்பேர்… யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வேதாராண்யம் மீனவர்கள்!

இலங்கை – இந்தியா இருநாடுகளுக்கிடையேயான கடற்பரப்பில் மீனவர்கள் மீன் பிடிக்கையில் எல்லை தெரியாமல் மற்றொரு நாட்டின் எல்லைக்குச் செல்வது வழக்கமான ஒன்றுதான். இப்போது வேறொரு சம்பவம் நடந்திருக்கிறது.

ஓரிரு நாட்களுக்கு முன், வேதாரணம் மீனவர்கள் நால்வர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று படகில் உள்ள இயந்திரம் ரிப்பேரானது. டீசலும் தீர்ந்து போகும் நிலையிலிருந்திருக்கிறது.

படகு ரிப்பேர்… யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வேதாராண்யம் மீனவர்கள்!

எனவே, தப்பிக்கும் விதமாக, நான்கு மீனவர்களும் இலங்கை, யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் கரை ஒதுங்கியுள்ளனர். திடீரென்று தமிழர்கள் அங்கு சென்றால் சந்தேகம் வரும் என்பதால் இலங்கையில் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் தாங்களே முன்சென்றனர்.

படகு ரிப்பேர்… யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வேதாராண்யம் மீனவர்கள்!

தங்களைப் பற்றிய விவரங்களையும், எப்படி இங்கே இந்த இடத்துக்கு வர நேரந்தது என்பதையும் விரிவாகக் கூறியிருக்கின்றனர். அவர்களே இனி, அந்த மீனவர்களை திருப்பி அனுப்புவதா.. இல்லை மேற்கொண்டு விசாரணை செய்வதா என்ற முடிவை எடுப்பார்கள்.