“பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது”

 

“பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது”

பாஜகவின் ஆதரவாளர்களை விட எதிர்ப்பு தெரிவிப்பவர்களே தமிழகத்தில் அதிகம். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்றன. எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற ஸ்கெட்ச் போட்டிருக்கும் பாஜக, அதிமுகவுடன் கைகோர்த்து பல்வேறு யூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது.

“பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது”

புதுச்சேரியின் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமான பாஜக, திமுகவை குறி வைத்து காய்நகர்த்திக் கொண்டிருக்கிறது. இது திமுக கூட்டணிக் கட்சியினரை கோபமுறச் செய்துள்ளது. இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் மக்களின் தீர்ப்பு பாஜகவின் தோல்வியை உறுதிப்படுத்தும். மதசார்பற்ற கூட்டணியே வெற்றி பெறும் என அதிரடியாக பேசினார்.

“பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது”

மேலும் பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது என திட்டவட்டமாக தெரிவித்த அவர், பாஜகவுடன் சேரும் எல்லா கட்சியையும் மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவை எதிர்க்கும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.