‘தமிழகத்தை அழிக்க விரும்பும் பாஜக’ ராகுல் விமர்சனம்

 

‘தமிழகத்தை அழிக்க விரும்பும் பாஜக’ ராகுல் விமர்சனம்

தமிழகம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை பிளவுப்படுத்தி பாஜக அழிக்க விரும்புகிறது எனவும் வெறுப்பு, வன்முறையை தூண்டும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘தமிழகத்தை அழிக்க விரும்பும் பாஜக’ ராகுல் விமர்சனம்

மேற்குவங்கத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி, “மேற்கு வங்காளத்தின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அழித்து, மாநிலத்தை பிரிக்க பாஜக விரும்புகிறது. அசாமிலும் அவர்கள் அதையே செய்கின்றனர். தமிழ்நாட்டிலும், அதிமுக கூட்டணியுடன் இணைந்து இதனையே செய்கின்றனர். பாஜகவால் வெறுப்பு, வன்முறை மற்றும் பிளவுபடுத்தும் அரசியலைத் தவிர வேறு எதையும் வழங்க முடியாது.

நாங்கள் ஒருபோதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்திருக்கவில்லை. எங்கள் போராட்டம் அரசியல் மட்டுமல்ல, கருத்தியல் ரீதியானது. மம்தாஜியைப் பொறுத்தவரை இது ஒரு அரசியல் சண்டை மட்டுமே. காங்கிரஸ் ஒருபோதும் தங்களுக்கு முன் சரணடையாது என்பது பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்.

வளர்ச்சியின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க காங்கிரஸ்-ஐ.எஸ்.எஃப்-கூட்டணிக்கு ஆதரவாக வாக்களியுங்கள்” எனக் கேட்டுக்கொண்டர்.