இஸ்லாமியர்கள்- பாஜகவினரிடையே மோதல்! பாஜகவினர் சாலைமறியல்

 

இஸ்லாமியர்கள்- பாஜகவினரிடையே மோதல்! பாஜகவினர் சாலைமறியல்

மதுரை புறநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சூழலில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மதுரை திருப்பாலையில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மதுரை பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சுசிந்திரன் கலந்துகொண்டார். இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். அங்கு இஸ்லாமியர்களுக்கும் பாஜகவினருக்கு பிரச்சனை ஏற்பட்டது.

இஸ்லாமியர்கள்- பாஜகவினரிடையே மோதல்! பாஜகவினர் சாலைமறியல்

இந்த நிலையில் புறநகர் மாவட்ட தலைவர் சுசிந்திரன் அலுவலகம் அடையாளம் தெரியாத 10பேர் கொண்ட கும்பலால் சேதப்படுத்தப்பட்டது. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 30 பிளாஸ்டிக் நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டதோடு, அலுவலக பேனர் கிழிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, உசிலம்பட்டி தேவர் சிலை முன்பாக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சொக்கநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கானர் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.