கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்.. மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜூகல் கிஷோர் பக்ரி காலமானார்

 

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்.. மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜூகல் கிஷோர் பக்ரி காலமானார்

கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மாரடைப்பால் மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜூகல் கிஷோர் பக்ரி காலமானார்.

மத்திய பிரதேசம் சாட்னா மாவட்டம் ரெய்கான் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜூகல் கிஷோர் பக்ரி. இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று எம்.எல்.ஏ. ஜூகல் கிஷோர் பக்ரி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்.. மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜூகல் கிஷோர் பக்ரி காலமானார்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

78 வயதான ஜூகல் கிஷோர் பக்ரிக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். ஜூகல் கிஷோர் பக்ரியின் இறுதி சடங்கு சத்னா மாவட்டத்தில் உள்ள அவரது மூதாதையர் கிராமமான வசுதாவில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூகல் கிஷோர் பக்ரி மறைவுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத், சபாநாயக கிரிஷ் கவுதம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்.. மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜூகல் கிஷோர் பக்ரி காலமானார்
உமா பாரதி

ஜூகல் கிஷோர் பக்ரி கடந்த 1993ம் ஆண்டு முதல் இந்த தொகுதியிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இதே தொகுதியில் 2 முறை தோல்வி கண்டுள்ளார். உமாபாரதி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.