கொடிக்கம்பம் உடைப்பு – காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 

கொடிக்கம்பம் உடைப்பு – காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்

கன்னிவாடி அருகே பாஜக கொடிக்கம்பங்கள் உடைக்கப்பட்டதை கண்டித்து, அக்கட்சியினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அடுத்த புதுப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக்கம்பங்களை, மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கொடிக்கம்பம் உடைப்பு – காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல் நிலையத்தைமுற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடிக்கம்பம் உடைப்பு – காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து, டிஎஸ்பி அசோகனிடம் கோரிக்கை மனுவை வழங்கிய அவர்கள், 2 நாட்களுக்குள் குற்றவாளிகளைகைதுசெய்யா விட்டால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கொடிக்கம்பம் உடைக்கப்பட்டதால் பதற்றம்நிலவி வருவதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.