புதிய கல்வி கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை என தெரிந்தே அரசியல் செய்கின்றனர்- பாஜக தலைவர் எல்.முருகன்

 

புதிய கல்வி கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை என தெரிந்தே அரசியல் செய்கின்றனர்- பாஜக தலைவர் எல்.முருகன்

மத்திய அரசு நடைமுறை படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருப்பது வேதனை அளிப்பதாகவும் தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் இருமொழி கொள்கையே தொடரும். தமிழ் மொழிக்கோ அல்லது தமிழுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

புதிய கல்வி கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை என தெரிந்தே அரசியல் செய்கின்றனர்- பாஜக தலைவர் எல்.முருகன்

மேலும், தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தந்த மாநிலங்களில் தங்களுக்கு ஏற்ப கொள்கையை பயன்படுத்திக் கொள்ள பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். முதல்வர் மும்மொழி கொள்கையை எதிர்த்ததற்கு பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மும்மொழி கொள்கை குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், கூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழை 3ஆவது மொழியாக படிக்கும் வாய்ப்பை நாம் புறக்கணிக்கிறோமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், புதிய கல்வி கொள்கை எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கவில்லை என தெரிந்தும் அரசியல் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.