வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு வாக்காளர்களுக்கு பாஜக தொல்லை?

 

வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு வாக்காளர்களுக்கு பாஜக தொல்லை?

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு வாக்காளர்களுக்கு பாஜக தொல்லை?

அந்த மனுவில், பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸப் குழுவில் இணையுமாறு லிங்குடன் குறுஞ்செய்திகள் வருகிறது. ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே இவ்வாறான குறுஞ்செய்திகள் வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடி வாக்கு சேகரிக்க முயற்சி செய்கிறது. இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.