“ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது; அடுத்து தயாநிதிமாறன்” : ஹெச். ராஜா ட்வீட்!

 

“ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது; அடுத்து தயாநிதிமாறன்” : ஹெச். ராஜா ட்வீட்!

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தெரிகிறது.

“ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது; அடுத்து தயாநிதிமாறன்” : ஹெச். ராஜா ட்வீட்!

இதுகுறித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர். எஸ். பாரதி இன்று அதிகாலை சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

“ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது; அடுத்து தயாநிதிமாறன்” : ஹெச். ராஜா ட்வீட்!

இதுகுறித்து கூறியுள்ள ஆர். எஸ. பாரதி, “கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கிய விவகாரத்தில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மீது புகார் அளித்திருந்தேன். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

“ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது; அடுத்து தயாநிதிமாறன்” : ஹெச். ராஜா ட்வீட்!

இந்நிலையில் ஆர். எஸ். பாரதி கைது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், “திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?” என்று பதிவிட்டுள்ளார்.