‘அமைச்சர்கள் பேசுவது சரியல்ல’ மீறினால் கூட்டணியில் பிரச்னை ஏற்படும்: ஹெச்.ராஜா எச்சரிக்கை!

 

‘அமைச்சர்கள் பேசுவது சரியல்ல’ மீறினால் கூட்டணியில் பிரச்னை ஏற்படும்: ஹெச்.ராஜா எச்சரிக்கை!

பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர்கள் பேசுவது சரியல்ல என தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊரவலத்துக்கு அரசு தடை விதித்தது. ஆனால் அதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை அரசு பொருட்படுத்தவில்லை. இதனை விமர்சித்து பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா, ” கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு” என பதிவிட்டிருந்தார்.இது அதிமுக அமைச்சர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

‘அமைச்சர்கள் பேசுவது சரியல்ல’ மீறினால் கூட்டணியில் பிரச்னை ஏற்படும்: ஹெச்.ராஜா எச்சரிக்கை!

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை உரசி பார்க்க கூடாது. ஹெச். ராஜா சொன்ன சொற்கள் அவருக்கு தான் பொருந்தும்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன் கடந்த காலத்தில் காத்துக்கிடந்தது யார் என எல்லாருக்கும் தெரியும்’ என ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்தார். அதே போல, அமைச்சர் செல்லூர் ராஜுவும் அவரை விமர்சித்து பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

‘அமைச்சர்கள் பேசுவது சரியல்ல’ மீறினால் கூட்டணியில் பிரச்னை ஏற்படும்: ஹெச்.ராஜா எச்சரிக்கை!

அப்போது பேசிய அவர், எல்லை மீறி போவது கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும் ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல என்றும் கூறினார். தொடர்ந்து, தான் தமிழக அரசை விமர்சித்ததே இல்லை என்றும் தோழமை சுட்டுதலோடு குறைகளை கூறுவதாகவும் பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் கூறினார். மேலும், எங்களுடைய வீச்சு நாடு முழுவதும் இருப்பதை போல தமிழகத்தில் தேர்தல் தயாரிப்புகள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.