பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டம் போடுங்கள் : தமிழக பாஜக வலியறுத்தல்!

 

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டம் போடுங்கள் : தமிழக பாஜக வலியறுத்தல்!

இந்து மத கடவுள்களையும் பிரதமரையும் அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜகவினர் வலியுறுத்தினர்.

கன்னியாகுமரியில் கிறித்துவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதாக கூறி கடந்த 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிறித்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாகப் பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சர்ச்சையை கிளப்பியது.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டம் போடுங்கள் : தமிழக பாஜக வலியறுத்தல்!

பாதிரியார் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் என பாஜக மற்றும் இந்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதையடுத்து பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை இன்று காலை கைது செய்தனர். அவருக்கு குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்ததையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதனிடையே ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் மதுவந்தி கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக அல்ல. மற்ற அனைத்திற்கும் குரல் கொடுக்கும் திமுக கனிமொழி இதற்கும் குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.