பைக் நிலை தடுமாறி விழுந்து விபத்து; ஒருவர் பரிதாப பலி!

 

பைக் நிலை தடுமாறி விழுந்து விபத்து; ஒருவர் பரிதாப பலி!

திருப்பத்தூர் அருகே வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளகுட்டை பகுதியை சேர்ந்த பழனி(37). இவர் நேற்று காலை வழக்கம் போல , பைக்கில் பணிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். சரியாக ஆலங்காயம் சாலையில் உள்ள வேப்பமரசாலை பகுதியில் இவர் சென்று கொண்டிருந்த போது, பைக் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் பெய்த கனமழையால் பைக் சறுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

பைக் நிலை தடுமாறி விழுந்து விபத்து; ஒருவர் பரிதாப பலி!

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பழனி(37) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வாணியம்பாடி போலீசார், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக் தடுமாறி விழுந்ததில், பழனி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.