மிகப் பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டது- பாபர் மசூதி தீர்ப்பு பற்றி ஹெச்.ராஜா பேட்டி!

 

மிகப் பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டது- பாபர் மசூதி தீர்ப்பு பற்றி ஹெச்.ராஜா பேட்டி!

பாபர் மசூதி வழக்கில் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டிருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

மிகப் பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டது- பாபர் மசூதி தீர்ப்பு பற்றி ஹெச்.ராஜா பேட்டி!

கொரோனா பாதிப்பால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் நேற்று மாலை காலமானார். அவரது உடல் திருச்சி சீராத்தோப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ராம கோபாலன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மிகப் பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டது- பாபர் மசூதி தீர்ப்பு பற்றி ஹெச்.ராஜா பேட்டி!

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்களை கொச்சைப்படுத்தலாம், விநாயகர் சிலையை கூட தூக்கி போட்டு உடைக்கலாம் என்ற இருந்த சமூகத்தை, இந்து முன்னணி கட்சியை நிறுவி தூக்கி நிறுத்தியவர் ராம கோபாலன் என்றும் கன்னியாகுமரி மண்டைக்காடு பகுதியில் இந்து குழந்தைகள் வீடு திரும்ப முடியுமா என்கிற நிலை இப்போது இல்லை என்றும் தெரிவித்தார்.

மிகப் பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டது- பாபர் மசூதி தீர்ப்பு பற்றி ஹெச்.ராஜா பேட்டி!

மேலும் பாபர் மசூதி தீர்ப்பு குறித்து பேசிய அவர், ராமர் கோவிலை கட்ட வேண்டும் என பேரணி நடத்திய அத்வானி உள்ளிட்டோரை கொச்சைப்படுத்தி பொய்வழக்கு போடப்பட்டதாகவும் நீதிமன்றத்தின் சிறப்பான இந்த தீர்ப்பு உண்மையை எடுத்துரைத்திறுப்பதாகவும் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.