ஊரடங்கு எதிரொலி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்ட விஜய் டிவி!

 

ஊரடங்கு எதிரொலி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்ட விஜய் டிவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் தயாரிப்பு நிறுவனமான என்டிமோலும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது. முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 4 சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஊரடங்கு எதிரொலி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்ட விஜய் டிவி!

ஆனால் நான்காவது சீசன்லாம் கிடையாது என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது விஜய் டிவி. காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இடையே அதிக ஆர்வமும் இந்த முறை இல்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த நான்கு மாசங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் மீண்டுமொரு பூட்டிய வீட்டிற்குள் 100 நாட்கள் இருக்க முடியுமா என்ற மிகுந்த அச்சம் அவர்களுக்குள் ஏற்பட்டு உள்ளதாம். அதனால் பிக்பாஸ் சீசன் 4 – ஐ விஜய் டிவி தள்ளி வைத்துவிட்டதாம்.