முதல்முறையாக அழுத ரம்யா ; கண்கலங்க வைக்கும் சுரேஷ் : பிக் பாஸ் முதல் ப்ரோமோ!

 

முதல்முறையாக அழுத ரம்யா ; கண்கலங்க வைக்கும் சுரேஷ் : பிக் பாஸ் முதல் ப்ரோமோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முதல்முறையாக அழுத ரம்யா ; கண்கலங்க வைக்கும் சுரேஷ் : பிக் பாஸ் முதல் ப்ரோமோ!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 25 ஆவது நாளான இன்று ஹவுஸ்மேட்ஸை அழ வைக்கிறார் பிக் பாஸ். நேற்றைய நிகழ்ச்சியில் பாலா – அர்ச்சனா இடையே மோதல், சமாதானத்திற்கு பிறகு அர்ச்சனா – பாலா இடையே அம்மா – மகன் உறவு என ஆனந்தமான குடும்பமாக வீடு மாறியது. ஒருபக்கம் பாலா – ஷிவானி இடையே காதல் டிராக் ஓட ஆரம்பித்துள்ளது .

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் , நீங்கா நினைவுகள் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்பது பற்றியும், அவர்களது நினைவுகள் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அப்போது பேசும் ரம்யா, அர்ச்சனா திருஷ்டி எடுக்கும் போது அம்மா தான் ஞாபகத்திற்கு வந்தாங்க என்று கூறி முதல்முறையாக அழுகிறார்.

முதல்முறையாக அழுத ரம்யா ; கண்கலங்க வைக்கும் சுரேஷ் : பிக் பாஸ் முதல் ப்ரோமோ!

அதேபோல் சம்யுக்தா பேசும் போது, நான் என் ஹஸ்பண்ட் கார்த்தி பற்றி பேசுனதே இல்ல. நான் அவரை மிஸ் பண்றேன் என்று சொல்கிறார். இறுதியாக பாலாஜியை பார்த்தால் என் பையன் ஞாபகம் வருகிறது என்று சுரேஷ் கூறி கண்கலங்குவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.