“எனக்கு எந்த கேம் பிளானும் இல்ல”…பிக் பாஸ் வீட்டில் குமுறும் ஷிவானி

 

“எனக்கு எந்த கேம் பிளானும் இல்ல”…பிக் பாஸ் வீட்டில் குமுறும் ஷிவானி

பிக் பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

“எனக்கு எந்த கேம் பிளானும் இல்ல”…பிக் பாஸ் வீட்டில் குமுறும் ஷிவானி

பிக் பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியில் நேற்று கிண்டல், காமெடி, விளையாட்டு என ஜாலியாக பொழுதை கழித்தனர். நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டின் முதல் வாரத்தின் தலைவராக ரம்யா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

“எனக்கு எந்த கேம் பிளானும் இல்ல”…பிக் பாஸ் வீட்டில் குமுறும் ஷிவானி

இப்படி உற்சகமாக பொழுதை கழித்தனர் ஹவுஸ்மேட்ஸ்.ஆனால் பிக் பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே யாரிடமும் பேசாமல் தனித்து இருப்பதாக ஹவுஸ்மேட்ஸ் பலர் ஷிவானியை டார்க்கெட் செய்தனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில்,ஷிவானி, பாலா மற்றும் சோம சேகருடன் தனக்கு உடைந்த இதயத்தை கொடுத்தவர்கள் பற்றி உரையாடுகிறார்.அப்போது சோம், ஜாலியாக இருங்க ஷிவானி ,உங்களுக்கு எவ்ளோ பாலோவர்கள் இருக்காங்க இன்ஸ்டாகிராமுல,என்ன நினைப்பாங்க சொல்லுங்க என்று தேற்றுகிறார்.இதையடுத்து நடிகர் ஆரியுடன் உரையாடும் ஷிவானி, நான் எந்த கேம் ப்ளானும் இல்லாம, எனக்கு தோன்றுறது என்ன? எனக்கு வரறது என்னன்னு தான் பண்ணிட்டு இருக்க என்று தனது ஆதங்கத்தை கூறுகிறார்.இப்படியாக அந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.