ஆரி பற்றி ரம்யா… கேபி பற்றி பாலா! புறணி… புறணி! – பிக்பாஸ் 85-ம் நாள்

 

ஆரி பற்றி ரம்யா… கேபி பற்றி பாலா! புறணி… புறணி! – பிக்பாஸ் 85-ம் நாள்

திங்கட்கிழமை என்றாலே கொஞ்சம் பரபரவென்றுதான் இருக்கும். காரணம், எவிக்‌ஷனுக்கு நாமினேஷன் செய்ய வேண்டிய நாள். அதுவும், நேற்று ஓப்பன் நாமினேஷன். அதனால், பட்டாசைக் கொளுத்தி போட்டதைப் போல தீப்பிடித்துக்கொண்டது. அதைப் பற்றிக் கட்டுரையில் பார்க்கலாம்.

85-ம் நாள்

வேக்கப் ஸாங் முடிந்ததும், நேரடியாக நாமினேஷன் சடங்குக்கு வந்தார் பிக்கி. ரம்யாவைக் கூப்பிட்டதும், கன்ஃபெக்‌ஷன் ரூம்க்குச் செல்ல தயாராக, பிளாஸ்மா டிவி முன் நின்று சொல்லவும் என்றதும், பாலா தவிர மற்றவர்கள் ஹேப்பி.

ஆரி பற்றி ரம்யா… கேபி பற்றி பாலா! புறணி… புறணி! – பிக்பாஸ் 85-ம் நாள்

ஆஜித் மற்றும் கேபியைச் சொன்னார் ரம்யா. ரம் மற்றும் ஷிவானியைச் சொன்னார் ரியோ. ஆஜித் மற்றும் ஷிவானியைச் சொன்னார் சோம்ஸ். சோம் மற்றும் கேபியைச் சொன்னார் பாலா. கேபி சொன்னது ஷிவானி மற்றும் ஆஜித்தை. ஆஜித் சொன்னது ரம்யா மற்றும் சோம். ஷிவானி சொன்னது கேபி மற்றும் ஆஜித். ஆரி சொன்னது ஷிவானி மற்றும் சோம்.

இதிலேயே நன்கு தெரிந்திருக்கும். அர்ச்சனா குருப்பில் உள்ள சோம், ரியோ, கேபி மூவரும் தங்களுக்குள் நாமினேட் செய்துகொள்ள வில்லை. அதேபோல ஷிவானி, பாலா, ரம்யா குருப் தங்களுக்குள் நாமினேட் செய்துகொள்ள வில்லை. இரு குரூப்களும் மாறி மாறி எதிர்குருப்பில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து குத்தினார்கள்.

ஆரி பற்றி ரம்யா… கேபி பற்றி பாலா! புறணி… புறணி! – பிக்பாஸ் 85-ம் நாள்

இறுதியாக, ஷிவானி, ஆஜித், ரம்யா, சோம், கேபி ஆகியோர் நாமினேஷன் பட்டிலில் இடம்பிடித்தார்கள்.

இதில் சோம்ஸை நாமினேட் செய்யும்போது காபி டாஸ்க்கில் சரியாக விளக்கம் சொல்லி தீர்ப்பு கொடுக்க வில்லை என்றதில் சோம்ஸ் கோபித்துக்கொண்டார். சரியாக பர்ஃபார்மன்ஸ் செய்ய வில்லை என்று ஆஜித்தை கேபி சொன்னதற்காக அவர் கோபித்துக் கொண்டார். சத்தம் இன்னும் கேட்க என கேபியை பாலா உள்ளிட்டோர் சொன்னதால் கேபி கோபித்துக்கொண்டார். பிக்கி என்ன நினைத்தாரோ அந்தத் திசையை நோக்கிச் செல்கிறது. அர்ச்சனா, அனிதா, இருந்திருந்தால் ஓப்பன் நாமினேஷனுக்கு கொழுந்து விட்டு எரிந்திருக்கும்.

வீட்டுக்குள் வேலையோ டாஸ்க்கோ செய்வதில்லை என்று கேபியைப் பற்றி புறணி பேசிக்கொண்டிருந்தார் பாலா. இன்னொரு பக்கம், ‘தான் சரியாக தெரிய வேண்டும் என்பதால், மற்றவர்களின் மைனஸைச் சொல்லிட்டே இருக்கார்’ என்று ஆரியைப் பற்றி ஷிவானியும் ரம்யாவும் புறணி பேசினார்கள்.

ஆரி பற்றி ரம்யா… கேபி பற்றி பாலா! புறணி… புறணி! – பிக்பாஸ் 85-ம் நாள்

’ஜட்ஜ்மெண்ட் தப்பாம்’ என்று சோம், ரியோ, கேபி குரூப் ஆரியைப் பற்றி புறணி பேசிட்டு இருந்தது. ‘வேலையே செய்யலையாம்’ என சோம்ஸை நிம்மதியாக குளிக்க விடாமல் புறணியைத் தொடர்ந்துகொண்டிருந்தார் கேபி.

இப்படி மாறி மாறி புறணி பேசுவதைக் கேட்டு பிக்கி ஒரு பக்கம் சந்தோஷப் பட்டாலும், இதெல்லாம் மூன்றாம் நான்காம் வாரத்தில் நடந்திருந்தால் நல்லா இருக்கும். படம் முடியும்போது வேர்க்கடலையை ஊதித் தாறீயேன்னு கடுப்பாகியிருக்கவும் கூடும்.

அடுத்து வடை, தோசை சுடும் விளம்பரத்தாரர் டாஸ்க் நடந்தது. அது முடிந்ததும் ஆஜித் அதிர்ச்சியான சம்பவத்தை நடத்தியிருந்தார். பாத்ரூமில் போய் கையால் சுவரைக் குத்தியிருக்கிறார். அதனால், பேண்ட்டேஜ் போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்திருந்தார். அதைக் கண்டித்தார் ரியோ.

ஆரி பற்றி ரம்யா… கேபி பற்றி பாலா! புறணி… புறணி! – பிக்பாஸ் 85-ம் நாள்

மாத்தி யோசி டாஸ்க் கொடுத்தார் பிக்கி. அதாவது குடுவைக்குள் இருக்கும் சீட்டுகளில் ஒன்றை எடுக்க வேண்டும். அதில் எழுதியிருக்கும் பெயருள்ள நபர் இந்த புத்தாண்டில் என்ன பழக்கத்தை விட வேண்டும், என்ன பழக்கத்தைத் தொடர வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டுமாம். பிக்கி எதிர்பார்த்த அளவுக்கு கண்டண்ட் இல்லை.

இன்றைய ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் உறவினர்கள் வரும் பகுதி காட்டப்பட்டது. அதிலும் ஷிவானியின் அம்மா வருகிறார். மீதமிருக்கும் 15 நாட்களாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று பார்ப்போம்.