கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் மனைவிக்கும் கொரோனா அறிகுறி!

 

கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் மனைவிக்கும் கொரோனா அறிகுறி!

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தற்போது படிபடியாக இறங்கி வருகிறது. 4 லட்சம் வரை சென்ற தொற்று பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் இரண்டாம் அலை முடிவடையும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த இரண்டாம் அலையில் பல்வேறு அரசியல்வாதிகளும் திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தான் ஐபிஎல் தொடரே பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் மனைவிக்கும் கொரோனா அறிகுறி!

தற்போது இந்தியாவின் மிக முக்கிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமாருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவியான நுபுருக்கும் அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பு மே 21ஆம் தேதி புவனேஸ்வரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அவரது தந்தை சமீபத்தில் புற்றுநோயால் உயிரிழந்தார்.

கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் மனைவிக்கும் கொரோனா அறிகுறி!

கொரோனா பரவல் காரணமாக இரண்டு செட் அணிகளாக பிசிசிஐ பிரித்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களைக் கொண்ட ஒரு அணி நியூஸிலாந்துடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுகிறது. மற்றொரு அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கும். ஓரிரு மூத்த வீரர்கள் மட்டுமே இருப்பர். அதில் புவனேஸ்வர் குமாரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில் தான் அவருக்கு கொரோனா இருப்பதாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.