பிரபல டிவி சீரியல் நடிகைக்கு வந்த பலாத்கார மிரட்டல் -இன்ஸ்டாகிராமில் மிரட்டும் நபரை விரட்டும் போலீஸ்

 

பிரபல டிவி சீரியல் நடிகைக்கு வந்த பலாத்கார மிரட்டல் -இன்ஸ்டாகிராமில் மிரட்டும் நபரை விரட்டும் போலீஸ்

கொல்கத்தாவில்  பிரபல பெங்காலி நடிகை பிரத்யுஷா பாலுக்கு இன்ஸ்டாகிராமில் பலாத்கார  மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

பிரபல டிவி சீரியல் நடிகைக்கு வந்த பலாத்கார மிரட்டல் -இன்ஸ்டாகிராமில் மிரட்டும் நபரை விரட்டும் போலீஸ்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்  பிரபல பெங்காலி நடிகை பிரத்யுஷா பால் பல டிவி சீரியல்களில் நடித்து வருகிறார் .அவர் நடித்த பல தொடர்கள் பெண்களை கவரும் வகையில் பிரபலமான தொடர்கள் .வங்காள மொழி தொடர்களில் அவர் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் .அவர் இன்ஸ்ட்டாகிராமில் மிக ஆக்டிவாக இருப்பது வழக்கம் .அவருக்கு சமீபத்தில் ஒரு நபர் பலமுறை பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் .மேலும் அவரின் பல போட்டோக்களை ஆபாசமான முறையில் சித்தரித்து அதை அவரின் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார் .

இதனால் அவர் அந்த நபரை  கிட்டத்தட்ட 30 முறை தடுத்துள்ளார். ஆனால் , அந்த  நபர் பால், தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்ந்து  அச்சுறுத்தியுள்ளார். இந்த அடையாளம் தெரியாத நபர் ஊடகத்தின் மூலம்  சனிக்கிழமை மாலை 6 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கும் அந்த நடிகை பிரத்யுஷா பாலுக்கு  கற்பழிப்பு மிரட்டல்களை அனுப்பியுள்ளார்.இதனால் அவர் அங்குள்ள சைபர் க்ரைம் போலீசில் அந்த நபர் மீது புகார் அளித்தார் .

அதனால் போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்தனர் ஆனால் , இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.மேலும் போலீசார் அந்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்