சாம்சனுக்கு சோதனை மேல் சோதனை… முக்கிய வீரர் திடீர் விலகல்!

 

சாம்சனுக்கு சோதனை மேல் சோதனை… முக்கிய வீரர் திடீர் விலகல்!

ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானும் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதிக் கொண்டன. இதில் ஆரம்பத்தில் ஆடிய பஞ்சாப் 221 ரன்கள் எடுத்தது. மிகப்பெரிய இலக்கை எதிர்நோக்கி ஆடவந்த ராஜஸ்தான் நூழிலையில் வெற்றியைப் பறிகொடுத்தது. ராஜஸ்தான் அணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கி டக்அவுட் ஆனார்.

சாம்சனுக்கு சோதனை மேல் சோதனை… முக்கிய வீரர் திடீர் விலகல்!

அதற்கு முன்னதாக பீல்டிங்கில் கெயிலின் கேட்ச் பிடிக்கும்போது ஸ்டோக்ஸின் இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் பெரிதாகி விரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் அந்த அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தானின் பிரைம் பவுலரான ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியிருந்தார். இதனால் அந்த அணி பேட்டிங், பவுலிங் என இரு பிரிவிலும் வலுவிழந்து காணப்படுகிறது.

இதுதொடர்பாக அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பென் ஸ்டோக்ஸுக்கு இடதுகை விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அதனால் இந்த சீசனிலிருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். ஆனாலும், தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் நீடிப்பார், அணிக்குத் தேவையான ஆலோசனைகளை அவர் வழங்குவார். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.