உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!


வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது.கடந்த இரண்டரை வருடங்களாக நடந்த லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் பிடித்த இந்திய அணியும், இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூஸிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. இதில் ரோகித் உடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களம் இறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் ரோகித் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல் ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி பின்வருமாறு. ரோகித் சர்மா , சுப்மன் கில் , சட்டேஸ்வர் புஜாரா , விராட் கோலி (கேப்டன்) அஜின்கியா ரகானே (துணை கேப்டன்) , ரிஷப் பண்ட் , ரவீந்திர ஜடேஜா , ரவிச்சந்திரன் அஸ்வின் , முகமது சமி , இசாந்த் சர்மா , ஜஸ்பிரித் பும்ரா , உமேஷ் யாதவ் , ஹனுமா விஹாரி , விருத்திமான் சகா , முகமது சிராஜ்.

அக்சர் படேல் , கே எல் ராகுல் , மயங்க் அகர்வால் , வாஷிங்டன் சுந்தர் , ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடமில்லை.