செல்போன் கடையில் வெடித்து சிதறிய பேட்டரி… அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்…

 

செல்போன் கடையில் வெடித்து சிதறிய பேட்டரி… அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்…

சென்னை

சென்னை போரூரில் செல்போன் கடையில் பழுது பார்த்தபோது திடீரென பேட்டரி வெடித்து சிதறியதால் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

சென்னை போருர் பகுதியில் முஜிபுர் ரகுமான் என்பவர் சொந்தமாக செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் இன்று கடைக்கு வந்து வாடிக்கையாளர்களின் செல்போன்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆண்ராய்டு போன் ஒன்றின் பேட்டரியை தனியாக பிரித்து பழுது பார்த்து கொண்டிருந்தபோது, அதன் பேட்டரியை மேசை மீது வைத்துள்ளார்.

செல்போன் கடையில் வெடித்து சிதறிய பேட்டரி… அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்…

தொடர்ந்து, செல்போன் டிஸ்பிளேவை துடைக்க பயன்படும் சானிடைசரை அந்த பேட்டரியின் மீது தெளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக பேட்டரி தீடீரென வெடித்து சிதறி, தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பயத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து கடை ஊழியர்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. பழுதுபார்த்தபோது செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் போருரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.