‘பரிகாரம் செய்வதாக ஏமாற்றிய கொள்ளைக் கும்பல்’ வயதான தம்பதிக்கு நேர்ந்த கதி : பதைபதைக்கும் சம்பவம்!

 

‘பரிகாரம் செய்வதாக ஏமாற்றிய கொள்ளைக் கும்பல்’ வயதான தம்பதிக்கு நேர்ந்த கதி : பதைபதைக்கும் சம்பவம்!

திருப்பூர் அருகே பரிகார பூஜை செய்வதாகக் கூறி ஏமாற்றிய கொள்ளை கும்பல், வயதான தம்பதியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், செம்மாண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்த தம்பதி ஆறுமுகம்(65) – ஈஸ்வரி(62). இவர்களுக்கு உதயா(35) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாததால் பெற்றோர் பல இடங்களில் சென்று வழிபாடுகள் நடத்தியுள்ளனர். பரிகாரங்கள் பலவற்றை அவர்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று, பரிகாரம் செய்வதாகக் கூறி அந்த தம்பதியின் பர்னிச்சர் கடையில் இன்று பூஜை நடத்தியுள்ளனர்.

‘பரிகாரம் செய்வதாக ஏமாற்றிய கொள்ளைக் கும்பல்’ வயதான தம்பதிக்கு நேர்ந்த கதி : பதைபதைக்கும் சம்பவம்!

பூஜை முடிந்த பிறகு காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுமாறு அந்த கொள்ளை கும்பல் கூறியதன் படி, வயதான தம்பதி குணிந்து ஆசீர்வாதம் பெறும் போது கழுத்திலேயே அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர்களிடம் இருந்து 5 சவரன் நகையையும் 10 ஆயிரம் பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ளது.

‘பரிகாரம் செய்வதாக ஏமாற்றிய கொள்ளைக் கும்பல்’ வயதான தம்பதிக்கு நேர்ந்த கதி : பதைபதைக்கும் சம்பவம்!

தகவல் அறிந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த போலீசார், அந்த கொள்ளை கும்பலின் தடையங்களை சேகரித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாஏ தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பரிகாரம் என்ற பேரில் ஆங்காங்கே கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் இச்சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.