திருமாவளவனை கண்டித்து நாளை நடைபெற இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை!

 

திருமாவளவனை கண்டித்து நாளை நடைபெற இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை!

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு படுத்தி மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை திருமாவளவன் குறிப்பிட்டதை மட்டும் எடிட் செய்து சிலர் அந்த வீடியோவை வைரலாக்கினர். இது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக திருமாவளவன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

திருமாவளவனை கண்டித்து நாளை நடைபெற இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை!

இந்நிலையில் பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் திருமாவளவன் எம்.பி-யாக உள்ள சிதம்பரம்
தொகுதியில் நாளை பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்றும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவே நாளை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.