சங்கரன்கோவிலில் பச்சிளம் குழந்தை எரித்துக்கொலை!

 

சங்கரன்கோவிலில் பச்சிளம் குழந்தை எரித்துக்கொலை!

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலில் பச்சிளம் குழந்தை எரித்துக்கொலை!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண் சிசு கொலை என்பது மீண்டும் தமிழகத்தில் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. புதையலுக்காக பெண் சிசு பலி கொடுக்கும் பயங்கரம், பெண் பிள்ளை என்பதால் தூக்கி வீசும் அவலம் என பல சம்பவங்கள் அரங்கேறி தமிழகத்தை உலுக்கி வருகிறது.

சங்கரன்கோவிலில் பச்சிளம் குழந்தை எரித்துக்கொலை!

இந்நிலையில் தென்காசி சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. துணியில் சுற்றி குழந்தையை தீவைத்து எரித்துக் கொன்ற கொடூரகாரர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.