2ஆவதும் பெண் குழந்தை! வருத்தத்தில் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…

 

2ஆவதும் பெண் குழந்தை! வருத்தத்தில் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் 3 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா. குணசேகரன் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக இவர்கள் ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மனமுடைந்த குணசேகரனின் மனைவி சங்கீதா தனக்கு பிறந்த பெண் குழந்தையை வீட்டிலுள்ள அண்டா தண்ணீரில் மூழ்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2ஆவதும் பெண் குழந்தை! வருத்தத்தில் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற பெருந்துறை காவல்துறையினர் இரு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கீதாவின் உயிரிழப்பிற்கு இது தான் காரணமா அல்லது வேறேதும் பிரச்சனையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.