மனைவியிடம் கருத்து வேறுபாடு; ஆட்டோ ஓட்டுநர் 4வது மாடியில் குதித்து தற்கொலை

 

மனைவியிடம் கருத்து வேறுபாடு; ஆட்டோ ஓட்டுநர் 4வது மாடியில் குதித்து தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக  மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆட்டோ ஓட்டுநர் 4வது மாடியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் எல்லையப்பன்(38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட எல்லையப்பன் கோபித்துக் கொண்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு ரேடியல் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 10 அடுக்கு மாடி கட்டிடத்தில் 4 மாடியில் ஏறி மது அருந்திக்கொண்டிருந்தார். விரக்தியில் இருந்த அவர், தனது காலணிகளை கழற்றி வைத்துவிட்டு, 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியிடம் கருத்து வேறுபாடு; ஆட்டோ ஓட்டுநர் 4வது மாடியில் குதித்து தற்கொலை

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற சிட்லப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.