மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோ டிரைவர் ஓட்டம்

 

மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோ டிரைவர் ஓட்டம்

ஆந்திராவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால்,மனைவியின் கழுத்தை கணவர் கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தூர் மாவட்டம் குண்ட்லபுரிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாபுராவ் (25). இவரது மனைவி கிரண்மய்(22). திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பாபுராவ் அவருடன்

மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோ டிரைவர் ஓட்டம்

அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு தம்பதியினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாபுராவ் கிரண்மயை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது கிரண்மயியின் கழுத்தை, அவரது கணவர் பாபுராவ் கத்தியால் அறுத்துள்ளார். வலியால் துடித்த கிரண்மயியின் சத்ததை கேட்ட

மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோ டிரைவர் ஓட்டம்

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், பாபுராவ் அங்கிருந்து தப்பியோடினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிம்மலபள்ளி காவல்துறையினர், கிரண்மயியை மீட்டு மதனபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பாபுராவை வலைவீசி தேடி வருகின்றனர்.