சிஎஸ்கேவில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய புள்ளி

 

சிஎஸ்கேவில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய புள்ளி

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் வருகிற 9-ம் தேதி சென்னையில் துவங்குகிறது. ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களது முகாமில் பயிற்சியை தொடங்கியும் , சில வீரர்கள் கொரானா தனிமைப்படுத்துதல் காலத்திலும் இருந்து வருகின்றனர்.

சிஎஸ்கேவில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய புள்ளி

இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவரும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளருமான ஜோஷ் ஹேசில்வுட் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களாக சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடர் போன்றவற்றில் பங்கேற்றதால் உடல் மற்றும் மன ரீதியாக ஓய்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்து நடைபெற உள்ள ஆஷஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பையை போன்றவற்றில் பங்கேற்று சிறப்பாக செயல்பட இந்த ஓய்வு அவசியமாகிறது என தெரிவித்துள்ளார்.

ஜோஷ் ஹேசில்வுடடின் திடீர் விலகலால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவலி உண்டாகி உள்ளது. ஹேசில்வுட்டிற்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.