கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா

 

கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா

கொரோனா பரவல் தற்போது பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கி விட்டது. இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தங்களைத் தற்காத்துக்கொள்ள திட்டமிடுகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 339 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 54 ஆயிரத்து 813 பேர். குணம் அடைந்தோர் 3 கோடியே 93 லட்சத்து 52 ஆயிரத்து 858 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,58,56,668 பேர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 27,785 பேர். இவர்களில் 25,506 பேர் குணமடைந்து விட்டனர். 907 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருந்தது. தற்போது குறைந்து விட்டது. ஆனால், தெற்கு ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

அதனால், தெற்கு ஆஸ்திரேலியாவில் அடுத்த 6 நாட்களுக்கு லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்கள், ஹோட்டல்கள், பள்ளி – கல்லூரிகள், சந்தைகள் உள்ளிட்டவை மூடப்படுகின்றன. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அடுத்த ஆறு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா எடுத்திருக்கும் இந்த நிலை விரைவில் பல நாடுகளுக்குப் பரவும் என்றே கணிக்கப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில் படிப்படியாகக் குறைந்துகொண்டிருந்த கொரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்று, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல பிரேசிலிலும் தொடர்கிறது. மேலும், அமெரிக்காவில் தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் அதிகமாகி வருகிறது.