காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி… மர்மநபருக்கு போலீஸ் வலை…

 

காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி… மர்மநபருக்கு போலீஸ் வலை…

மதுரை

மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் நேற்றிரவு போக்குவரத்து ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை, காவலர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் காரை ஓட்டிவந்த நபர், ஆய்வாளர் நந்தகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பி சென்றார்.

காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி… மர்மநபருக்கு போலீஸ் வலை…

இதில் அவருக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக நந்தகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் போலீசார், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் காரை ஓட்டிவந்த மர்மநபரை தேடி வருகின்றனர்.