சோழர் கால நாணயங்களை வெளிநாட்டினர் கடத்த முயற்சி – அதிர்ச்சி தகவல்

 

சோழர் கால நாணயங்களை வெளிநாட்டினர் கடத்த முயற்சி – அதிர்ச்சி தகவல்

பழங்கால பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்குவது, அந்தப் பொருளின் மதிப்புக்காக அல்ல. அந்தப் பொருளின் வரலாற்று சிறப்புக்காகவே. ஆனால், இதையே கடத்தல் கும்பல் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களைக் கடத்த முயன்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

கிமு 1206 முதல் கி.பி 1720 வரையிலான சுல்தான் மற்றும் முகலாயர் காலம் மற்றும் கிபி 1800 முதல் கி.பி 1900 வரையிலான குஷானர், யாதேயர், குப்தர், பிரதிகர், சோழர், ராஜ்புதனர், முகலாயர், மராத்தியர், காஷ்மீர் ராஜ்ஜியங்கள், பிரிட்டிஷ் இந்தியா, பிரெஞ்சு மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40,282 நாணயங்கள், 18 பழங்கால முத்திரைகள்/ ஆட்சியாளர்கள் அணியக்கூடிய மத சின்னம், மன்னர் குடும்பத்தைச் சேர்நத பெண்கள் அணியும் வெள்ளி ஒட்டியாணம்… பட்டியலைப் படிப்பதற்குள் மலைப்பாக இருக்கிறது அல்லவா…

சோழர் கால நாணயங்களை வெளிநாட்டினர் கடத்த முயற்சி – அதிர்ச்சி தகவல்

இவற்றை பல பொருட்களை வெளிநாட்டினர் இருவர் கடந்த 1994-ம் ஆண்டு தில்லியிருந்து ஹாங்காங்குக்கு கடத்திச் செல்ல முயன்றபோது, சுங்கத்துறை பிடித்து பறிமுதல் செய்தது. இதைத் தொடர்ந்து தில்லியில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கக் காசுகள் உட்பட பழங்காலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.

சோழர் கால நாணயங்களை வெளிநாட்டினர் கடத்த முயற்சி – அதிர்ச்சி தகவல்

இந்தப் பொருட்களை தொல்லியல் துறை மதிப்பிட்டபோது 63.90 கோடி எனத் தெரிவித்தது. நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட 40,301 பழங்காலப் பொருட்களை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலத் சிங் படேலிடம், இன்று ஒப்படைத்தார்.